கே.வி. ஷைலஜா சில மலையாளக் கதைகளைத் தொகுத்து தமிழுக்குத் கொண்டு வந்துள்ளார். வித்தியாசமான சில மலையாளக் கதைகள் தமிழுக்கும், தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்கள் மலையாளத்துக்கும் போக இருக்கிறார்கள். தராசு பிசகாத பண்டமாற்று இது.
இந்தத் தொகுதிக்கு அவர் வைத்த பெயர் மிகுந்த அர்த்தம் பொருந்தியது. " பச்சை இருளனின் சகா போத்தன் மாடன்" பச்சை இருளன் பவா செல்லத்துரை எழுதிய தமிழ்க் கதையின் ஒரு பாத்திரம் போத்தன் மாடன் வி.வி. ஸ்ரீ ராமனின் மலையாளத் கதையில் வரும் பாத்திரம், இருவருமே சமூகத்தில் வகிக்கும் பாத்திரம் நிகர்த் தன்மை கொண்டது. இருவரின் வெளிகளும் காடு, மலை, மரம் தெருவின் இருண்டாகாரம் என்று சுருங்கிப் போனது. வளைந்த கரங்களின் சாட்டை நுனி, இருவரின் உடம்பிலும் தழும்பேற்றியுள்ளது. குளப்பாசிகள் மாதிரி, சமூகத்தை மூடுபவர்கள் இவர்கள். இவர்களின் உணவு, எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வறுபட்டதாய் இல்லை, அனைத்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள் துரதிஷ்ட வசமாக இவர்கள் மனிதர்கள்.
தமிழ் பச்சை இருளனை, மலையாள மாடனின் சகாவாக மாற்றும் இம்முயற்சி, மிக அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்தும் நம் தமிழ்ச் சூழலில் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்து உயிருடன் சகாவாதம் அன்றி ஜீவியத்தின் நோக்கம் தான் வேறு யாது ?
No product review yet. Be the first to review this product.