காலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறைகளிலும் மனித குலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
கற்காலத்தில் தொடங்கி பல்வேறு வரலாற்றுக் கால கட்டங்களைக் கடந்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, பல யுத்தங்கள் புரிந்து, பல அழிவுகளைச் சந்தித்து, பல மேன்மையான படைப்புகளை உருவாக்கி, போரடிப் போராடித்தான் இன்றைய நாகரிக உலகுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் உருவாக்கிய கதைகளும், கண்டுபிடிப்புகளும், கட்டடங்களும், எழுத்து முறையும், நிர்வாக அமைப்பும், போர்க் கருவிகளும், உற்பத்தி முறைகளும், சிகிச்சைகளும், சட்டங்களும் காலத்தை வென்று இன்றும் நாம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.