சுயசரிதை என்பது சுவாரஸ்யாம் நிறைந்தது என்றாலும் ..
சமயங்களில் சுயசரிதை என்பது சுயபுராணமாக மட்டுமே அமைந்துவிடும்
ஆனால்..
கங்கை அமரனின் வாழ்க்கை அனுபவம் ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ தொடராக ‘நக்கீரன்’ இதழில் வந்தபோது..அது சுயசரிதையாக மட்டும் இல்லாமல் சுயவிமர்சனமாகவும் இருப்பதாகப் பலராலும் பாராட்டப்பட்டது.
‘பாவலர் பிரதர்’ஸின் கடைக்குட்டியான கங்கை அமரன்,தன் வாழ்க்கை அனுபவங்களினுடே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அருமையாகப் பொருத்தியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் இசைஞானத்தை விமர்சனம் கலந்து மெச்சியுள்ளார்.பாரதிராஜாவின் படைப்புலகமும்,தனியுலகமும் கங்கை அமரனின் எழுத்தால் காட்சியாகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற இரு இமயங்களுடன்..அவர்களின் செல்லப்பிள்ளைபோல் பழகிய அனுபவத்தை கங்கை அமரன் விவரித்திருக்கும் விதம் படிக்கப் படிக்க சுவையானது.
சினிமா உலகம்,இசை உலகம்,சினிமா பிரபலங்கள் அன்றைய அரசியல் என பலவும் அறிய உதவுகிறது இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.