" சமூக நிகழ்வுகளைப் படைப்பாக்கும் வித்தை குறித்தெல்லாம் பல பட்டறைகள் நடத்தி இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக்கொடுக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக நடப்பும் புனைவும் கலந்த அற்புதமான படைப்பாக பெத்தவன் கதை வந்துள்ளது. ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்சனைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டும் துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை, அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இப்படைப்பை வெளியிட்டுள்ளார்.கண்களில் நீர் திரையிடாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியாது."
No product review yet. Be the first to review this product.