"நதியில் விளையாடி கொடியில் தலைசீவி "..... என்று தாலாட்டாக ஒலித்தால் அங்கு குழந்தை பிறந்த விஷேசம் ...
" வாராயென் தோழி வாராயோ " ....என்று ஒலித்தால் அது மணவிழா.....!
"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்...என்றால் அது கல்லூரி விழா...!
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே .... என்றால் இன்னிசைக் கச்சேரி துவக்கம்...!
"வீடு வரை மனைவி வீதி வரை உறவு ...
என்றால் அங்கே ஒரு சோக நிகழ்வு...
என சரியான சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் கூட நம் தமிழர்களின் வாழ்வியலுடன் பிரிக்க முடியாதபடி காலத்தால் அழியா காவிய நாயகன் கண்ணதாசனின் எழுத்துக்கள் இரண்டறக் கலந்து விட்டது..
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல,மன்னாதி மன்னன் படத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என வீரத்தைக் தூண்டும் கவிஞரின் பாடல் இன்னும் கட்சி பேதமில்லாமல் எல்லா அரசியல் மேடையிலும் தேசிய கீதம் போல, ஒலிக்கப்படுவது சாகாவரம் பெற்ற அவரது எழுத்துக்கு கிடைத்த நிரந்தர வெற்றிகளில் ஒன்று.
கவிஞரின் பாடல்கள் யாவும் கேட்ட மாத்திரத்திலேயே நம் எல்லோரையும் அந்தந்த நிகழ்வுக்கேற்ப நம் மனநிலையைத் தயார்படுத்தி விடும் அற்புத சக்தி கொண்ட வைர வரிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
No product review yet. Be the first to review this product.