ஐவகை நிலங்களில் மருத நிலமே சிறப்பு வாய்ந்த நிலமாகும்.வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மறுத்த நிலம் என வழங்கப்படுகிறது.அம்மருத நிலப்பகுதியாம் கொள்ளிடக் கரையில் மேலக்குடிக்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மருதகாசியவர்கள்.மருதநிலம் நமக்களித்த மருதகாசியவர்கள் சுமார் 30 ஆண்டுகள் காலம் திரைப்பட உலகில் பாடல் எழுதி வந்துள்ளார்.திரைப்பட பாடல்களில் இதிகாசம் ,புராணம் ,சரித்திரம் ,இலக்கியம் போன்றவற்றுடன் பாமரமக்கள் பேசும் பாமரத்தமிழை இவர் தம் பாடல்களில் கையாண்டுள்ளார் .இலக்கண\நயமுள்ள பாடல்களையும் எழுதியுள்ளார்.இவர் எழுதியுள்ள பாடல்கள் 312 பாடல்களை இந்த\r\nமுதல் தொகுதில் வாசகர்களுக்கு வழங்கி இப்புத்தகம் சிறப்பு பெறுகிறது
No product review yet. Be the first to review this product.