குண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வைத் தொலைத்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 போன்ற நாட்களில் முசுலிம் ஒருவர், ரயிலிலோ பேருந்திலோ அச்சமின்றி பயணம் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்தையும் பொது நீரோட்டத்திலிருந்து அச்சுறுத்தி அகற்றுவதில் பெரிய வெற்றியை இந்துமதவெறியர்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலை உருவாக்கியதில், அவர்களால் திரித்துப் புரட்டப்பட்ட வரலாறுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன் எதிர்விளைவாக, கணிசமான முசுலீம் இளைஞர்கள் – உயர் கல்வி கற்றவர்கள் கூட – அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இசுலாமியர்களாகப் பிறந்த யாரும் தமது மதத்தையோ அல்லது மத கடுங்கோட்பாட்டுவாத அமைப்புகளையோ விமரிசிக்கக் கூடாது என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இசுலாமியர்களை மிரட்டுகின்றன. அவர்களை துரோகிகள் என்று தூற்றுகின்றன. இவ்வாறு முசுலிம் அடிப்படைவாதம் பெருகுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகின்றனர். இரு தலைக் கொள்ளி எறும்பாக இசுலாமிய மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில்தான், ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை கோம்பை அன்வர் இயக்கி வெளியிட்டிருக்கிறார். - வினவு
No product review yet. Be the first to review this product.