வாழ்வின் அநேக தருணங்களை கடந்து கொண்டிருக்கும் நமக்கு அதில் எங்கெல்லாம் கவித்தமும், மனிதத்தன்மையும் பொதிந்திருக்கின்றன. என்பதைக் காட்டுபவை. கே. ஸ்டாலின் கவிதைகள், சிறுநகரமும், கிராமமும் வாழ்விடமாகக் கொண்டவனின் மனதினை தன்னளவில் எந்த புகாருமின்றி பதிவு செய்திருக்கிறார். இன்று தமிழில் எளிய சொல்லல் முறைக்காக கொண்டாடப்படும் பல்வேறு கவிஞர்களுக்கு முன்பாகவே பிரத்யேகமான மொழியை அடைந்தவர்.
இத்தொகுப்பின் பெரும்பான்மையான கவிதைகள் ஆனந்த விகடன், கல்கி, கணையாழி, போன்ற இதழ்களில் வந்து கவனிக்கபெற்றவை. இத்தொகுப்பு தொடர்ச்சியான அவரது கவிதைச் செயல்பாட்டின் மூலம் அவரை தமிழின் மூத்த கவிஞர்களில் ஒருவராக அடையாளப்படுத்துகிறது.
- கண்டராதித்தன்