ஏன் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொள்வதன் மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விட முடியாது என்பதுதான்.
எத்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொள்வதன் மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கி விட முடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறையும் என்னும் வாதத்திலும் உண்மை இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. அதனால்தான், உலகமே மரண தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தியா செல்லவேண்டிய திசையும் இதுதான் என்கிறார் கோபால கிருஷ்ண காந்தி. சட்டத்தின் அடிப்படையில் தான் மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது என்றாலும் அடிப்படையில் அதுவும் ஒரு கொலையே. மத்திய காலங்களில் பின்பற்ற பட்டு வந்த இந்த அநாகரிகத்தை ஒரு ஜனநாயக நாடான இந்தியா பின்பற்றக் கூடாது என்கிறார் நூலாசிரியர். மரண தண்டனைக்கு எதிரான மனித நேயமிக்க ஒரு குரல் இந்நூல்.
No product review yet. Be the first to review this product.