வையிலைவேற் காளை என்கிற இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக சரவண சந்திரன், இதுவரை வெளிச்சம் பாயாத, நிலங்களுக்கு இடையில் மூச்சிரைக்க ஓடியிருக்கிறார். பல்வேறு நிறங்களும் சுவைகளும் மனைகளும் நிறைந்த ஒரு பிரத்யேகமான உலகம், இத்தொகுப்பின் வழி விரிகிறது.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல எல்லா தட்டு மனிதர்களும் உலவுகிற அவ்வுலகின் வழியாக, தத்துவம், தொழில், வாழ்வு குறித்த சிக்கல்கள் எனப் பதற்றங்கள் சூழ்ந்த தமிழக வாழ்வின் குறுக்கு வேற்று தோற்றம். அழுத்தமான அனுபவங்களினுடாகப் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் படிக்கையில், திமிலை நிமிர்த்திக் கொண்டு ஓடி வரும் காங்கேயம் காளை ஒன்றின் சித்திரம் உங்களுக்குள் திரளலாம்.